சங்கீதம் 14
பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.
“இறைவன் இல்லை” என்று
மூடன் தன் இருதயத்தில் சொல்கிறான்.
அவர்கள் சீர்கெட்டவர்கள், அவர்களுடைய செயல்கள் இழிவானவை;
நன்மை செய்கிறவன் ஒருவனும் இல்லை.
 
யெகோவா பரலோகத்திலிருந்து
மனுமக்களை நோக்கிப் பார்க்கிறார்,
அவர்களில் விவேகமுள்ளவனாவது
இறைவனைத் தேடுகிறவனாவது உண்டோ என்று பார்க்கிறார்.
எல்லோரும் வழிவிலகி, சீர்கெட்டுப் போனார்கள்;
நன்மை செய்கிறவன் ஒருவனுமில்லை,
ஒருவனாகிலும் இல்லை.
 
தீயோர்களுக்கு எதுவும் தெரியாதோ?
 
மனிதர் அப்பம் சாப்பிடுவதுபோல், அவர்கள் என் மக்களை விழுங்குகிறார்கள்;
அவர்கள் யெகோவாவை வழிபடுவதுமில்லை.
அவர்கள் அங்கே பயத்தில் நடுங்குகிறார்கள்;
ஏனெனில் இறைவன் நீதிமான்களின் கூட்டத்தில் இருக்கிறார்.
தீமை செய்கிறவர்களே, நீங்கள் ஏழைகளின் திட்டங்களைக் குழப்புகிறீர்கள்;
ஆனால் யெகோவாவோ ஏழைகளின் தஞ்சம்.
 
சீயோனிலிருந்து இஸ்ரயேலுக்கு இரட்சிப்பு வெளிவருவதாக!
யெகோவா தமது மக்களின் சிறையிருப்பைத் திருப்பும்போது
யாக்கோபு மகிழட்டும், இஸ்ரயேல் களிகூரட்டும்!