சங்கீதம் 129
சீயோன் மலை ஏறும்போது பாடும் பாடல்.
“என் வாலிப காலத்திலிருந்து அவர்கள் என்னை மிகவும் ஒடுக்கினார்கள்” என்று
இஸ்ரயேலர் சொல்லட்டும்;
“என் வாலிப காலத்திலிருந்து அவர்கள் என்னை மிகவும் ஒடுக்கினார்கள்,
ஆனாலும் அவர்களால் என்மேல் வெற்றிகொள்ள முடியவில்லை.
உழுகிறவர்கள் என்னுடைய முதுகின்மேல் உழுது,
தங்களுடைய வரப்புகளை நீளமாக்கினார்கள்.
ஆனாலும் யெகோவா நீதியுள்ளவர்;
அவர் கொடியவர்களின் கட்டுகளை அறுத்து, என்னை விடுதலையாக்கினார்.”
 
சீயோனை வெறுக்கிற அனைவரும்
வெட்கப்பட்டுத் திரும்பிப் போகட்டும்.
அவர்கள் வீட்டுக்கூரையில் முளைக்கும் புல்லைப்போல் ஆகட்டும்;
அது வளரும் முன்பு வாடிப்போகுமே.
அறுவடை செய்கிறவன் அவற்றால் தன் கைகளை நிரப்பிக்கொள்ள முடியாது;
அவற்றைச் சேர்க்கிறவனும் தன் கைகளை நிரப்பிக்கொள்ள முடியாது.
வழிப்போக்கர்கள் அவர்களிடம்,
“யெகோவாவின் ஆசீர்வாதம் உங்கள்மேல் இருக்கட்டும்;
யெகோவாவின் பெயரினால் நாங்கள் உங்களை ஆசீர்வதிக்கிறோம்”
என்றும் சொல்லாதிருக்கட்டும்.