சங்கீதம் 128
சீயோன் மலை ஏறும்போது பாடும் பாடல்.
யெகோவாவுக்கு பயந்து அவருடைய வழிகளில் நடக்கும்
அனைவரும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
உன் உழைப்பின் பலனை நீ சாப்பிடுவாய்;
ஆசீர்வாதங்களும் செல்வச் செழிப்பும் உன்னுடையவைகளாகும்.
உன் மனைவி உன் வீட்டிற்குள்
கனி நிறைந்த திராட்சைக் கொடியைப்போல் இருப்பாள்;
ஒலிவமரத்தைச் சுற்றித் தளிர்கள் இருப்பதுபோல்,
உன் பிள்ளைகள் உன் பந்தியிலே உன்னைச் சுற்றி இருப்பார்கள்.
ஆம், யெகோவாவுக்குப் பயந்து நடக்கிற மனிதன்
இவ்விதமாய் ஆசீர்வதிக்கப்படுகிறான்.
 
யெகோவா சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பாராக;
உன் வாழ்நாட்களெல்லாம்
எருசலேமின் செழிப்பை நீ காண்பாயாக.
நீ உன் பிள்ளைகளின் பிள்ளைகளைக் காணும்வரை வாழ்ந்திருப்பாயாக;
இஸ்ரயேலின்மீது சமாதானம் இருப்பதாக.