சங்கீதம் 125
சீயோன் மலை ஏறும்போது பாடும் பாடல்.
யெகோவாவை நம்புகிறவர்கள் சீயோன் மலையைப்போல்
என்றென்றும் அசையாமல் நிலைத்திருப்பார்கள்.
மலைகள் எருசலேமைச் சுற்றிலும் இருப்பதைப்போல்,
யெகோவா இப்பொழுதும் எப்பொழுதும்
தமது மக்களைச் சுற்றியிருக்கிறார்.
 
நீதிமான்களுக்கென ஒதுக்கப்பட்ட நாட்டின்மேல்,
கொடியவர்களின் ஆட்சி நீடிக்காது;
இல்லையெனில், நீதியற்றவர்களும் தீமைசெய்யத்
தங்கள் கைகளை நீட்டலாம்.
 
யெகோவாவே, நல்லவர்களுக்கு,
இருதயத்தில் நேர்மையாய் இருப்போருக்கு நன்மை செய்யும்.
குறுக்கு வழிகளுக்குத் திரும்புகிறவர்களையோ,
யெகோவா தீயவரோடேகூட தண்டிப்பார்.
 
இஸ்ரயேலின்மீது சமாதானம் உண்டாவதாக.