சங்கீதம் 124
சீயோன் மலை ஏறும்போது பாடும் தாவீதின் பாடல்.
யெகோவா நமது பக்கத்தில் இல்லாவிட்டால்,
இதை இஸ்ரயேலர் சொல்லட்டும்:
மனிதர் நம்மை தாக்கும்போது
யெகோவா தாமே நமது பக்கத்தில் இல்லாவிட்டால்,
அவர்கள் கோபம் நமக்கு எதிராகப் பற்றியெரிந்தபோது,
அவர்கள் நம்மை உயிருடன் விழுங்கியிருப்பார்களே;
வெள்ளம் நம்மை மூழ்கடித்திருக்குமே,
நீரோட்டம் நம்மீது புரண்டு ஓடியிருக்குமே,
பொங்கி வந்த வெள்ளம்
நம்மீது பாய்ந்தோடியிருக்குமே.
 
அவர்கள் நம்மை பற்களால் கிழித்துப்போட இடமளிக்காத
யெகோவாவுக்குத் துதி உண்டாகட்டும்.
வேடனுடைய கண்ணியிலிருந்து
தப்பின பறவையைப்போல் நாம் தப்பிப் பிழைத்தோம்;
கண்ணி அறுந்தது,
நாம் தப்பினோம்.
வானத்தையும் பூமியையும் படைத்தவரான
யெகோவாவினுடைய பெயரிலே நமக்கு உதவி உண்டு.