சங்கீதம் 100
நன்றியுணர்வை வெளிப்படுத்தும் சங்கீதம்.
பூமியிலுள்ளவர்களே, எல்லோரும் மகிழ்ச்சியுடன் யெகோவாவை ஆர்ப்பரியுங்கள்.
மகிழ்ச்சியுடன் யெகோவாவை வழிபடுங்கள்,
மகிழ்ச்சிப் பாடல்களோடு அவர்முன் வாருங்கள்.
யெகோவாவே இறைவன் என்று அறியுங்கள்.
அவரே நம்மை உண்டாக்கினார், நாம் அவருடையவர்கள்;
நாம் அவருடைய மக்கள், அவருடைய மேய்ச்சலின் ஆடுகள்.
 
அவருடைய வாசல்களில் நன்றியோடும்,
அவருடைய ஆலய முற்றங்களில் துதியோடும், உட்செல்லுங்கள்
அவருக்கு நன்றி செலுத்தி, அவருடைய பெயரைத் துதியுங்கள்.
யெகோவா நல்லவர், அவருடைய அன்பு என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறது;
அவருடைய உண்மை எல்லாத் தலைமுறைகளுக்கும் தொடர்ந்து வருகிறது.