சங்கீதம் 29
தாவீதின் சங்கீதம்.
பரலோகவாசிகளே, யெகோவாவை கனம்பண்ணுங்கள்;
அவருடைய மகிமைக்காகவும் வல்லமைக்காகவும் யெகோவாவை கனம்பண்ணுங்கள்.
யெகோவாவினுடைய பெயருக்குரிய மகிமைக்காக கனம்பண்ணுங்கள்;
பரிசுத்த அலங்காரத்துடன் யெகோவாவை வழிபடுங்கள்.
 
யெகோவாவினுடைய குரல் வெள்ளத்தின்மேல் ஒலிக்கிறது;
மகிமையின் இறைவன் முழங்குகிறார்;
பெருவெள்ளத்தின்மேல் யெகோவா முழங்குகிறார்.
யெகோவாவினுடைய குரல் வல்லமையுள்ளது;
யெகோவாவினுடைய குரல் மாட்சிமை பொருந்தியது.
யெகோவாவினுடைய குரல் கேதுரு மரங்களை உடைக்கிறது;
யெகோவா லெபனோனின் கேதுரு மரங்களைத் துண்டுகளாக உடைக்கிறார்.
அவர் லெபனோனை ஒரு கன்றுக்குட்டியைப் போலவும்,
சிரியோன்* மலையை ஒரு இளம் காட்டெருதைப் போலவும் துள்ளப்பண்ணுகிறார்.
யெகோவாவினுடைய குரல்
மின்னல் கீற்றுகளுடன் பளிச்சிடுகிறது.
யெகோவாவினுடைய குரல் பாலைவனத்தை நடுங்கச் செய்கிறது;
காதேஷின் பாலைவனத்தை யெகோவா அதிரப்பண்ணுகிறார்.
யெகோவாவினுடைய குரல் கர்வாலி மரங்களை முறிக்கிறது.
காடுகளை அழித்து வெளியாக்குகிறது;
அவருடைய ஆலயத்திலோ அனைவரும், “மகிமை!” என அறிவிக்கிறார்கள்.
 
10 யெகோவா வெள்ளத்தின்மேல் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறார்;
யெகோவா என்றென்றும் அரசனாக சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறார்.
11 யெகோவா தமது மக்களுக்குப் பெலன் கொடுக்கிறார்;
யெகோவா தமது மக்களை சமாதானத்தால் ஆசீர்வதிக்கிறார்.
* சங்கீதம் 29:6 29:6 அதாவது, எர்மோன் மலை