சங்கீதம் 16
மிக்தாம் என்னும் தாவீதின் சங்கீதம்.
இறைவனே, என்னைப் பாதுகாத்துக்கொள்ளும்,
ஏனெனில் நான் உம்மில் தஞ்சம் அடைகிறேன்.
 
நான் யெகோவாவிடம், “நீரே என் யெகோவா;
உம்மைத்தவிர என்னிடம் ஒரு நன்மையும் இல்லை” என்று சொன்னேன்.
நாட்டிலுள்ள பரிசுத்தவான்கள், “அவர்கள் சிறந்தவர்கள்
என் மகிழ்ச்சி எல்லாம் அவர்களிலேயே இருக்கின்றன.”
பிற தெய்வங்களைத் தேடி ஓடுகிறவர்களுக்கு துயரங்கள் அதிகரிக்கும்.
இரத்தபான காணிக்கைகளை அந்த தெய்வங்களுக்கு நான் ஊற்றமாட்டேன்;
அவைகளின் பெயர்களை என் உதடுகளினால் சொல்லவு மாட்டேன்.
 
யெகோவாவே, நீரே எனது சுதந்திரம், ஆசீர்வாதத்தின் பாத்திரமுமாய் இருக்கிறீர்;
எனது பங்கை பாதுகாப்பானதாய் ஆக்கியிருக்கிறீர்.
எனக்கான எல்லைப் பகுதிகள் இன்பமான இடங்களில் அமைந்துள்ளன;
நிச்சயமாகவே மகிழ்ச்சியான உரிமைச்சொத்து எனக்கு உண்டு.
எனக்கு ஆலோசனை தருகின்ற யெகோவாவை நான் துதிப்பேன்;
இரவிலும் என் இருதயம் எனக்கு அறிவைப் புகட்டுகிறது.
யெகோவாவையே எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்.
அவர் என்னுடைய வலதுபக்கத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படமாட்டேன்.
 
ஆகையால், என் இருதயம் மகிழ்ந்து என் நாவு களிகூருகிறது;
என் உடலும் பாதுகாப்பாய் இளைப்பாறும்.
10 ஏனென்றால் நீர் என்னை பாதாளத்தில் கைவிட்டுவிடமாட்டீர்;
உமது பரிசுத்தவான் அழிவைக் காணவும் விடமாட்டீர்.
11 வாழ்வின் பாதையை நான் அறியப்பண்ணினீர்;
உமது சமுகத்தில் என்னை ஆனந்தத்தாலும்,
உமது வலதுபக்கத்தில் என்னை நித்திய இன்பங்களினாலும் நிரப்புவீர்.