சங்கீதம் 131
சீயோன் மலை ஏறும்போது பாடும் தாவீதின் பாடல்.
யெகோவாவே, என் இருதயம் பெருமையுள்ளதல்ல,
என் கண்கள் மேட்டிமையானவைகளுமல்ல;
பெரிய காரியங்களிலும்,
எனக்கு மிஞ்சிய செயல்களிலும் நான் ஈடுபடுவதில்லை.
பால் மறந்த குழந்தை தன் தாயின் மடியில் இருப்பதுபோல்,
என் ஆத்துமாவை நான் அடக்கி அமைதியாக்கினேன்;
என் ஆத்துமா பால் மறந்த குழந்தையைப்போல் இருக்கிறது.
 
இஸ்ரயேலே, இப்பொழுதும் எப்பொழுதும்
யெகோவாவிலேயே உன் நம்பிக்கையை வைத்திரு.