சங்கீதம் 112
அல்லேலூயா.
 
யெகோவாவுக்குப் பயந்து நடக்கிறவனும்,
அவருடைய கட்டளைகளில் மகிழ்ச்சியடைகிறவனும் ஆசீர்வதிக்கப்பட்டவன்.
 
அவனுடைய பிள்ளைகள் நாட்டில் பலமுள்ளவர்களாய் இருப்பார்கள்;
நீதிமான்களின் தலைமுறைகள் எல்லாம் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும்.
செல்வமும் சொத்துக்களும் அவன் வீட்டிலிருக்கும்;
அவனுடைய நீதி என்றும் நிலைக்கிறது.
நீதிமான்களுக்கு இருளிலும் வெளிச்சம் உதிக்கும்;
ஏனெனில் அவர்கள் இரக்கமும், கருணையும், நீதியுமுள்ளவர்கள்.
தாராள மனதுடன் கடன்கொடுத்து,
தன் காரியங்களை நீதியுடன் நடப்பிக்கிறவனுக்கு நன்மை உண்டாகும்.
 
நிச்சயமாய் அவன் ஒருபோதும் அசைக்கப்படமாட்டான்;
நீதிமானை மக்கள் நீடித்த காலத்திற்கு நினைவிற்கொள்வார்கள்.
துர்ச்செய்தியின் பயம் அவனுக்கு இருக்காது;
அவனுடைய இருதயம் யெகோவாவை நம்பி உறுதியாய் இருக்கிறது.
அவனுடைய இருதயம் பாதுகாப்பாய் இருக்கிறது, அவனுக்குப் பயமே இருக்காது;
கடைசியில் வெற்றிப் பெருமிதத்தோடு தன் எதிரிகளைப் பார்ப்பான்.
அவன் ஏழைகளுக்கு அன்பளிப்புகளை அள்ளிக்கொடுப்பான்;
அவனுடைய நீதி என்றென்றும் நிலைத்திருக்கிறது;
அவன் மதிப்பிற்குரியவனாய் தலைநிமிர்ந்து நடப்பான்.
 
10 கொடுமையானவன் அதைக்கண்டு ஏமாற்றமடைவான்;
அவன் தன் பற்களை கடித்துக்கொண்டு அழிந்துபோவான்;
கொடுமையுள்ளவர்களின் ஆசைகள் நிறைவேறாமற் போகும்.