சங்கீதம் 110
தாவீதின் சங்கீதம்.
யெகோவா, என் ஆண்டவரிடம் சொன்னதாவது:
 
“நான் உமது பகைவரை
உமது கால்களுக்குப் பாதபடி ஆக்கும்வரை
நீர் என் வலதுபக்கத்தில் அமர்ந்திரும்.”
 
யெகோவா உமது வல்லமையான செங்கோலை சீயோனிலிருந்து விரிவுபடுத்துவார்;
“நீர் உமது பகைவரின் மத்தியில் ஆளுகை செய்வீர்!”
உமது மக்கள் உமது யுத்தத்தின் நாளில்,
தாங்களாகவே முன்வருவார்கள்;
அதிகாலையின் கருப்பையிலிருந்து வரும் பனியைப்போல்
உமது வாலிபர்கள்
பரிசுத்த அணிவகுப்புடன் வருவார்கள்.
 
“மெல்கிசேதேக்கின் முறைமையின்படி,
நீர் என்றென்றைக்கும் ஆசாரியராகவே இருக்கிறீர்”*
என்று யெகோவா ஆணையிட்டிருக்கிறார்;
அவர் தமது மனதை மாற்றமாட்டார்.
 
யெகோவா உமது வலதுபக்கத்தில் இருக்கிறார்;
அவர் தமது கோபத்தின் நாளில் அரசர்களை தண்டிப்பார்.
அவர் பிற நாடுகளை நியாயந்தீர்ப்பார்;
இறந்தவர்களைக் குவித்துப் பூமி முழுவதிலும் உள்ள ஆளுநர்களை தண்டிப்பார்.
வழியில் உள்ள நீரோடையிலிருந்து அவர் தண்ணீர் குடிப்பார்;
ஆகையால் அவர் தமது தலைநிமிர்ந்து நிற்பார்.
* சங்கீதம் 110:4 110:4 எபி. 5:6