சங்கீதம் 108
தாவீதின் சங்கீதமாகிய பாடல்.
இறைவனே, என் இருதயம் உறுதியாயிருக்கிறது;
நான் என் முழு ஆத்துமாவோடும் இசையமைத்துப் பாடுவேன்.
யாழே, வீணையே, விழித்தெழுங்கள்,
நான் அதிகாலையை விழித்தெழச் செய்வேன்.
யெகோவாவே, நாடுகள் மத்தியில் நான் உம்மைத் துதிப்பேன்;
மக்கள் மத்தியில் நான் உம்மைப் பாடுவேன்.
ஏனெனில் உமது உடன்படிக்கையின் அன்பு பெரியது,
அது வானங்களைப் பார்க்கிலும் உயர்ந்தது;
உமது சத்தியம் ஆகாயங்களை எட்டுகிறது.
இறைவனே, வானங்களுக்கு மேலாக புகழ்ந்து உயர்த்தப்படுவீராக;
உமது மகிமை பூமியெங்கும் இருக்கட்டும்.
 
நீர் நேசிப்பவர்கள் மீட்கப்படும்படி, நீர் எங்களைக் காப்பாற்றி,
உமது வலதுகரத்தின் வல்லமையினால் எங்களுக்கு உதவிசெய்யும்.
இறைவன் தமது பரிசுத்த இடத்திலிருந்து பேசியது:
“நான் வெற்றிகொண்டு சீகேமைப் பிரித்தெடுப்பேன்;
சுக்கோத்தின் பள்ளத்தாக்கை அளந்துகொடுப்பேன்.
கீலேயாத் என்னுடையது, மனாசேயும் என்னுடையது;
எப்பிராயீம் என் தலைக்கவசம்,
யூதா என் செங்கோல்.
மோவாப் என் கழுவும் பாத்திரம்,
நான் ஏதோமின்மீது என் காலணியை எறிவேன்;
நான் பெலிஸ்தியாவை வென்று முழக்கமிடுவேன்.”
 
10 அரண்சூழ்ந்த நகரத்திற்கு யார் என்னைக் கொண்டுவருவார்?
யார் என்னை ஏதோமுக்கு வழிநடத்துவார்?
11 இறைவனே, எங்களைப் புறக்கணித்தவரும்,
எங்கள் படைகளுடன் போகாதிருந்தவரும் நீரல்லவா?
12 பகைவரை மேற்கொள்ள எங்களுக்கு உதவும்;
ஏனெனில் மனிதனின் உதவியோ பயனற்றது.
13 இறைவனாலேயே நாம் வெற்றிபெறுவோம்;
அவர் நமது பகைவரை மிதித்துப்போடுவார்.