சங்கீதம் 150
அல்லேலூயா,
 
இறைவனை அவருடைய பரிசுத்த இடத்தில் துதியுங்கள்;
அவருடைய வல்லமை வெளிப்படும் வானங்களில் அவரைத் துதியுங்கள்.
அவருடைய வல்லமையின் செயல்களுக்காக அவரைத் துதியுங்கள்;
இணையற்ற அவருடைய மகத்துவத்திற்காக அவரைத் துதியுங்கள்.
எக்காள சத்தத்தோடு அவரைத் துதியுங்கள்;
யாழோடும், வீணையோடும் அவரைத் துதியுங்கள்.
தம்புராவுடன் நடனமாடி அவரைத் துதியுங்கள்;
கம்பியிசைக் கருவிகளினாலும், புல்லாங்குழலினாலும் அவரைத் துதியுங்கள்.
கைத்தாளங்களின் ஓசையுடன் அவரைத் துதியுங்கள்;
அதிர்ந்து ஒலிக்கும் கைத்தாளங்களுடன் அவரைத் துதியுங்கள்.
 
சுவாசமுள்ள யாவும் யெகோவாவைத் துதிப்பதாக.
 
அல்லேலூயா.