சங்கீதம் 133
சீயோன் மலை ஏறும்போது பாடும் தாவீதின் பாடல்.
இறைவனின் மக்கள் ஒற்றுமையுடன் ஒருமித்து வாழ்வது எவ்வளவு நல்லதும்,
எவ்வளவு மகிழ்ச்சிக்குரியதுமாய் இருக்கிறது!
 
அது தலையில் ஊற்றப்பட்டு தாடியில் வடிகின்ற
விலையேறப்பெற்ற எண்ணெய்போல் இருக்கிறது;
ஆரோனின் தாடியில் வடிந்து,
அவனுடைய அங்கிகளின் கழுத்துப்பட்டியில் இறங்கும் எண்ணெய்போல் இருக்கிறது.
எர்மோன் மலையின் பனி
சீயோனின் மலைகள்மேல் இறங்குவதைப்போல் அது இருக்கிறது;
ஏனெனில் அங்கே யெகோவா தமது ஆசீர்வாதத்தை வழங்குகிறார்;
வாழ்வையும் என்றென்றைக்கும் வழங்குகிறார்.